ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினர்களை தெரிவு செய்வதில் பலத்த இழுபறி நிலவி வந்த நிலையில் தற்போது அவ்விடயம் முடிவுக்கு வந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியில் பங்காளிக் கட்சிகளாக இருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் தேசியப் பட்டியல் ஒதுக்கீட்டில் முன்னர் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் தமக்கு தேசியப் பட்டியல் இடம் வழங்கப்பட வேண்டும் இல்லையேல் பாராளுமன்றத்தில் தனி அணியாக செயற்படுவோம் என அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தேசியப் பட்டியல் உறுப்பினர்களை தெரிவு செய்யும் அதிகாரத்தை, கூட்டணியின் நன்மை கருதி சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களாகும் ஏழு பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன்.
அந்தவகையில் தெரிவாகியிருப்பவர்களாக தெரியவந்துள்ளது,
ரஞ்சித் மத்துமபண்டார
இம்தியாஸ் பகீர் மரிக்கர்
திஸஸ் அத்தநாயக்க
ஹரீன் பெர்ணான்டோ
மயந்த திஸநாயக்க
எரான் விக்கிரமரத்ன
டயனா கமகே
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை